tamilnadu

செல்போன் அழைப்பை எடுக்காத மனைவியைக் கொலை செய்த கணவன் கைது

கோவை, ஜூன் 1–செல்போன் அழைப்பை நீண்ட நேரம் எடுக்காத மனைவியைக் கத்தியால் குத்தி கணவன் கொலை செய்தசம்பவம் கோவையில் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் அதேபகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை செய்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர். இந்த நிலையில் வெள்ளியன்று மதியம் கனகராஜ் செல்போனில் நந்தினியை அழைத்துள்ளார். நீண்ட நேரம் நேரமாகியும் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ்  நந்தினிவேலை செய்யும் கல்லூரி வளாகத்துக்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியைஎடுத்து வயிறு உள்ளிட்ட 3 இடங்களில் குத்தியுள்ளார். இதில், நந்தினி ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து, கனகராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் நந்தினியைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தசம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல்துறையினர் தப்பியோடிய கனகராஜைப் பிடித்து கைது செய்தனர்.

;